வேட்பு மனுவை வாபஸ் பெற்ற என்.ஆர். இளங்கோ: எம்பி ஆகிறார் வைகோ

 

வேட்பு மனுவை வாபஸ் பெற்ற என்.ஆர். இளங்கோ:  எம்பி ஆகிறார் வைகோ

திமுகவின் என்.ஆர்.இளங்கோ வேட்பு மனுவை திரும்பப் பெற்றதால் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி எம்பிக்களாகின்றனர் 

திமுகவின் என்.ஆர்.இளங்கோ வேட்பு மனுவை திரும்பப் பெற்றதால் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி எம்பிக்களாகின்றனர் .

vaiko

தேச துரோக வழக்கில் வைகோவிற்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும்  வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களவை தேர்தலின் எம்பியாக வைகோ செய்யும் மனு நிராகரிக்கப்படலாம் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து ஒருவேளை வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் அவருக்கு மாற்றாக திமுகவைச் சேர்ந்த என்.ஆர். இளங்கோ வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனால் 6 பேருக்கான மாநிலங்களவை தேர்தலில் என்.ஆர். இளங்கோ உட்பட 7 பேரின் மனு ஏற்கப்பட்டிருந்தது. 

ilango

இந்நிலையில் தற்போது வைகோவின் வேட்பு மனு ஏற்கப்பட்டதால்  என்.ஆர். இளங்கோ தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதனால்  வைகோ, சண்முகம், அன்புமணி, முஹமத் ஜான், வில்சன் சந்திரசேகரன் ஆகிய 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவை எம்பிக்கள் ஆகியுள்ளனர்.