வெள்ளத்தில் மிதக்கும் மும்பை: இதுவரை 18 பேர் உயிரிழப்பு!

 

வெள்ளத்தில் மிதக்கும் மும்பை: இதுவரை 18 பேர் உயிரிழப்பு!

மும்பையில் கடந்த ஐந்து நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் 540 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது

மும்பை: மகாராஷ்டிராவில் கனமழை காரணமாகச் சுவர் இடிந்து விழுந்து 18 பேர் பலியாகினர். 13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

rain

மும்பையில் கடந்த ஐந்து நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் 540 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் காணும் இடமெல்லாம் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து மட்டுமில்லாமல் விமான ஓடுதள பாதையையும் நீர் சூழ்ந்துள்ளது. மழையால் மக்கள் வீடுகளை விட்டு  ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் இன்று மும்பை வரவேண்டிய 54 விமானங்களில் அருகிலுள்ள விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது. 

rain

இந்நிலையில்  கிழக்கு மலாட் பகுதியில் குடிசைப்பகுதி ஒன்றில் இன்று அதிகாலை சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் குழுவினர்  மீட்புப்பணிகளில்  ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து  உயிரிழந்தவர்களின்  குடும்பங்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். இதே போல் கல்யாண் பகுதியிலுள்ள பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேரும், புனேவில்  கல்லூரி ஒன்றில் சுவர் இடிந்ததில் 6 பேரும் பலியாகியுள்ளனர். 

rain

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மற்றும் பால்கர் பகுதியில் ஜூலை 2,4 மற்றும் 5ஆம் தேதிகளில் அதிகளவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.