வெள்ளத்தில் ஃபோட்டோ ஷூட் எடுத்த மாணவி! இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு!! 

 

வெள்ளத்தில் ஃபோட்டோ ஷூட் எடுத்த மாணவி! இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு!! 

தலைநகர் பாட்னாவில் உள்ள நேஷ்னல் ஃபேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் படிக்கும்  அதிதி சிங் என்ற மாணவி வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலையில் போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டார்.

பீகாரில் கல்லூரி மாணவி ஒருவர் வெள்ள நீரில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார். 

தலைநகர் பாட்னாவில் உள்ள நேஷ்னல் ஃபேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் படிக்கும்  அதிதி சிங் என்ற மாணவி வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலையில் போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டார். பல்வேறு கோணங்களில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

வெள்ளத்தில் வெள்ளம் சூழ்ந்த தெருக்களுக்கு நடுவில் நின்று போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகிவருகிறது. மியாவ் ஸ்டுடியோ என்ற புகைப்பட நிறுவனத்தை நடத்தி வரும் சவுரப் அனுராஜ் என்பவரால் இந்த புகைப்படங்கள் எடுத்துள்ளது. . ‘பேரழிவில் தேவதை’ என்ற தலைப்பின் கீழ் இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டன. இந்த புகைப்படங்களுக்கு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பலர் வரவேற்றுள்ளனர். 

athithi singh

பீகார் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை கொட்டித்தீர்த்துவருகிறது. இதுவரை பீகாரில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் அத்தியாவசிய தேவைகள் கிடைக்கப்பெறாமல் அவதிக்குள்ளாகிவருகிறார். தாழ்வான பகுதிகள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.