வெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா!

 

வெள்ளத்தின் போது  களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா!

கேரள வெள்ளத்தின் போது  களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

திருச்சூர் அருகே புத்தம் பள்ளியைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன். இவர் தற்போது  தாதர் – நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.  கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது தான் ஒரு ஐஏ எஸ் அதிகாரி என்பதை மறைத்து , செங்கண்ணூரில் உள்ள நிவாரண முகாமில் பொருள்களைப் பிரித்து அனுப்பும் பணிகளில் 8 நாள்களாக இருந்தார். 

மக்களோடு மக்களாக களப்பணியாற்றி வந்த இவரை 9 வது நாளில் பிற அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டனர். இதனால் அவர் வெளியுலகத்திற்கு அறிமுகமாகி பலராலும் பாராட்டப்பட்டார். 

இந்நிலையில்,ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  தனது ராஜினாமா கடிதம் ஏற்கப்படும் வரை தான் பணியில் நீடிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.