வெளுத்து வாங்கிய கனமழை.. மின்னல் தாக்கி இருவர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

 

வெளுத்து வாங்கிய கனமழை.. மின்னல் தாக்கி இருவர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. அதன் படி நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. 

ttn

இந்நிலையில் கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயி விஜயன் நேற்று ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். அதனைத்தொடர்ந்து, மாதர்பாக்கம் இருளர் காலனியை சேர்ந்த பூஜ்ஜியம்மாள் என்பவரும் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த  போது மின்னல் தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்துள்ளார். இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.