” வெளியில் வராதீங்க ப்ளீஸ்” காலில் விழுந்து கெஞ்சும் இளைஞர்கள்!

 

” வெளியில் வராதீங்க ப்ளீஸ்” காலில் விழுந்து கெஞ்சும் இளைஞர்கள்!

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து  வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

உலகில் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் பொருட்டு உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து  வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ttn

இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் வெளியே நடமாடி வருகிறார்கள்.

gg

  
இந்நிலையில் தேனி பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் மக்கள் நடமாட்டம் வழக்கம் போல உள்ளது. இதனால் சமூக விலகல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  விழுதுகள் என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் 144 தடை உத்தரவை மீறி வெளியில் வருபவர்களின் காலில் விழுந்து  வணங்கி வெளியில் வரவேண்டாம் என்று வேண்டி கேட்டு வருகின்றனர். அதேபோல் பொருட்களை வாங்க கடைக்கு செல்லும் போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.