வெளிநாடு வாழ் இந்தியர்கள் 276 பேருக்கு கொரோனா தொற்று!

 

வெளிநாடு வாழ் இந்தியர்கள் 276 பேருக்கு கொரோனா தொற்று!

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது.

coronavirus

பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 ஆயிரத்து 272 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் 151 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

List

இந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சுமார் 276 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் 255 பேர், ஐக்கிய அரபு அமீரகத்தில் 12 பேர், இத்தாலியில் 5 பேர், ஹாங்காங், குவைத், ருவாண்டா, இலங்கையில் தலா ஒருவர் என மொத்தம் 276 வெளிநாடுவாழ் இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.