வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே!: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!?

 

வெற்றி தோல்விகளைக் கடந்து  மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே!:  நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!?

வெற்றி தோல்விகளைக் கடந்து  மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களுக்கு நன்றி என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.  

சென்னை:  வெற்றி தோல்விகளைக் கடந்து  மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களுக்கு நன்றி என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.  

surya

நடிகர் சூர்யா நடிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே..எஸ். ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை செல்வராகவன்  இயக்கியுள்ளார்.  மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் இன்று வெளியாகிரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 

suray

இந்நிலையில் நடிகர் சூர்யா ரசிகர்களுக்குத்  தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அதில், ‘அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து  மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது.   அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்’ என்று பதிவிட்டுள்ளார்.

 

சூர்யாவின் திரைப்படங்கள் சில சமீபகாலமாகப் பேசும்படியாக இல்லாததால் அவரது ரசிகர்கள் வருத்தத்திலிருந்தனர். இருப்பினும் சூர்யா மீதான அவர்களின் அன்பு கொஞ்சமும் குறையவில்லை. அதனால் தான் ஒருவருட எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள என்.ஜி.கே. படத்தை அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.