வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஓர் அங்கம் ! இந்திய அணிக்கு ஆறுதல் சொல்லும் பிரதமர் மோடி!!

 

வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஓர் அங்கம் ! இந்திய அணிக்கு ஆறுதல் சொல்லும் பிரதமர் மோடி!!

வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஓர் அங்கம், இந்திய அணி அடுத்துவரும் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். 

வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஓர் அங்கம், இந்திய அணி அடுத்துவரும் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். 

உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 240 ரன்களை இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 

இங்கிலாந்தின் மான்செஸ்டர் மைதானத்தில் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து நேற்று நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து இன்று போட்டி மீண்டும் தொடங்கியது. இதில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் 74 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 67 ரன்களும் எடுத்திருந்தனர்.  240 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோர்  ஒரே ரன்னில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்து வெளியேறினர். தோனி 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 221 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா நியூசிலாந்து அணியிடம் தோற்றுப்போனது

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில், “துரதிர்ஷ்டவசமான முடிவு என்றாலும் கூட இந்திய அணியின் போராட்டக் குணத்தை பார்க்க முடிந்தது. முடிவு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இன்றையப் போட்டியில் இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சு சிறப்பாக களமிறங்கியது. அதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். வெற்றிகளும் இழப்புகளும் வாழ்க்கையின் ஓர் அங்கம். அணியின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” எனக் பதிவிட்டுள்ளார்.