வெறுங்கையை வீசிக் கொண்டு நலம் விசாரிக்க வந்த விஜய்!

 

வெறுங்கையை வீசிக் கொண்டு நலம் விசாரிக்க வந்த விஜய்!

சென்னை நசரத்பேட்டையில் உள்ள Evp பிலிம் சிட்டியில்  ‘தளபதி 63’ படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட் ஒன்றில் இருந்த பல்ப் விழுந்ததில், செல்வம் எனும் எலெக்ட்ரிஷியன் படுகாயம் அடைந்தார்.

சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படுகாயமடைந்த எலெக்ட்ரிஷியன் குறித்து நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார் விஜய்.

vijay

சென்னை நசரத்பேட்டையில் உள்ள Evp பிலிம் சிட்டியில்  ‘தளபதி 63’ படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட் ஒன்றில் இருந்த பல்ப் விழுந்ததில், செல்வம் எனும் எலெக்ட்ரிஷியன் படுகாயம் அடைந்தார். அந்த இடத்திலேயே அவர் மயக்கம் அடைந்ததால், படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை விரைவாக அருகிலுள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

விஜய்

மிகவும் மோசமான கண்டிஷனில் இருப்பதாக மருத்துவமனை சார்பில் சொல்லப்பட்டதால், நேற்று இரவு நடக்கவிருந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் எலெக்ட்ரிஷியன் செல்வம் உடல்நிலையை பற்றி அறிய விஜய் மருத்துவமனைக்கு வந்தார். உடல்நலன் பற்றி விசாரித்துவிட்டு பண உதவி எதுவானாலும் தயங்காமல் கேட்டுகும்படி கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் பணம் வழங்குவது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. தளபதி 63 படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் துவங்குவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பேட்டியில் கண் கலங்கிய சன்னி லியோன்! எதுக்கு தெரியுமா?