வெப் சீரிஸாக வெளியாகும் ‘வடசென்னை’ ராஜனின் கதை!

 

வெப் சீரிஸாக வெளியாகும் ‘வடசென்னை’ ராஜனின் கதை!

‘வடசென்னை’ படத்தில் இடம்பெற்ற அமீரின் ராஜன் கதாபாத்திரத்தின் கதையை வெப் சீரிஸாக வெளியிட வெற்றிமாறன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சென்னை: ‘வடசென்னை’ படத்தில் இடம்பெற்ற அமீரின் ராஜன் கதாபாத்திரத்தின் கதையை வெப் சீரிஸாக வெளியிட வெற்றிமாறன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘வடசென்னை’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வெற்றியை பெற்று வருகிறது.

இதில் இயக்குநர் அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரத்தின் இளம் வயது முதல் வடசென்னை கேங்ஸ்டராக அவர் உருவாகியது முதலான கதையை வெப் சீரிஸாக எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸுக்கு ‘ராஜன் வகையரா’ எனவும் அவர் தலைப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் ‘வெக்கை’ நாவலை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது. அதை முடித்த பின், ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாக பணிகளை துவக்க திட்டமிட்டுள்ளனர்.