வெந்தயத்தை இப்படி செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்குமாம்!!

 

வெந்தயத்தை இப்படி செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்குமாம்!!

சிலருக்கு அடிக்கடி உடம்பு சூடு பிடித்து, அதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்றவை உண்டாகும்

சிலருக்கு அடிக்கடி உடம்பு சூடு பிடித்து, அதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்றவை உண்டாகும். இதுபோன்ற நீர்க்கடுப்பு பிரச்னையை சரிசெய்ய மாத்திரைகள் சாப்பிடுவதெல்லாம் வேலைக்கே ஆகாது. 

நாட்டு வைத்தியம் தான் இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். நீர்க்கடுப்பு போன்ற பிரச்னைகளால் உடலில் சூடு அதிகரித்து,  கட்டில் விஷயங்களில் சரியாக செயல்பட முடியாமல் போகலாம். 

அவ்வாறு உடலில் சூடு அதிகரித்துவிட்டால், என்ன செய்யலாம். அதற்கு மிக எளிமையான தீர்வை வெந்தயம் தரும். அது என்னவெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து, பராமரிக்கப்படும்.

இதன்மூலம் ஆண்மையை அதிகரிக்கச் செய்ய முடியும். குறிப்பாக வெந்தயத்தை பகல் முழுக்க தண்ணீரில் ஊறவைத்து (இடையில் ஒருமுறை தண்ணீரை மாற்றுங்கள்) பின் ஒரு வெண்மையான காட்டன் துணியில் எடுத்து கட்டி, முளைக்கட்ட விடுங்கள். மறுநாள் காலையில் அரும்பு அரும்பாக முளைக்கட்டியிருக்கும். 

அதை அப்படியே சாப்பிடலாம். இல்லையென்றால் மைய விழுதாக அரைத்து மோரில் கலந்தும் குடித்து வரலாம். பிறகு உங்களாலேயே வீரியத்தன்மை கூடியிருப்பது உணர முடியும். 

வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தயப் பொடியை நீரில் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும்.

வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. மேலும் இதனை சாப்பிடுவதால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும்.

நிறைய பெண்களுக்கு மார்பகத்தின் அளவை பெரிதாக்க ஆசை இருக்கும். அத்தகைய பெண்கள் நீங்களாக இருந்தால், வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் இயற்கையாக மார்பகத்தின் அளவு பெரிதாகும்.

உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்து, அதனால் கடுமையான வலியை சந்தித்து வந்தால், வெந்தயத்தை சாப்பிட்டு வாருங்கள்.