வெத்து சண்டை வீரரான குத்து சண்டை வீரர் தற்கொலை  -உடல் வலிமைபோல மனவலிமை இல்லாததால்… 

 

வெத்து சண்டை வீரரான குத்து சண்டை வீரர் தற்கொலை  -உடல் வலிமைபோல மனவலிமை இல்லாததால்… 

நாக்பூரில் வசிக்கும் 19 வயதான  குத்து சண்டை வீரர் பிரணவ் ரவுத் , இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மகாராஷ்டிராவை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.மேலும் ரவுத் அகோலாவில் உள்ள ஒரு விளையாட்டு அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார்

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில்  19 வயதான தேசிய அளவிலான குத்துச்சண்டை வீரர் தனது விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
நாக்பூரில் வசிக்கும் 19 வயதான  குத்து சண்டை வீரர் பிரணவ் ரவுத் , இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மகாராஷ்டிராவை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.மேலும் ரவுத் அகோலாவில் உள்ள ஒரு விளையாட்டு அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார்.”வியாழக்கிழமை அவர் அகோலாவில் இருந்தபோதிலும், அவர் உடல்நலப் பிரச்சினை காரணமாக பயிற்சிக்கு வரவில்லை” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

வெள்ளிக்கிழமை, அவர் அகோலாவில் ஒரு போட்டியில் பங்கேற்கவிருந்தார், ஆனால் காலையில் அவர் தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் .அவருக்கு போதிய வருமானம் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது காதல் பிரச்சினையை தாங்கும் மனவலிமை இல்லாதவராக அவர் இருக்கலாம் என யூகங்கள் உள்ளன .
இருந்தாலும் இந்த கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான சரியான காரணம், உடனடியாக அறிய முடியவில்லை.சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை, மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்