வீரமணி, வைகோ, திருமாவளவனை இயக்குவது யார்? – எகிறும் ஹெச்.ராஜா

 

வீரமணி, வைகோ, திருமாவளவனை இயக்குவது யார்? – எகிறும் ஹெச்.ராஜா

பொன்.மாணிக்கவேல் விவகாரத்தில் வீரமணி, வைகோ, திருமாவளவனை இயக்குவது யார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கை: பொன்.மாணிக்கவேல் விவகாரத்தில் வீரமணி, வைகோ, திருமாவளவனை இயக்குவது யார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலுநாச்சியாரின் 222-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கையில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வேலுநாச்சியார், குயிலி, மருதுபாண்டியர்கள் குறித்த பாடம் தமிழக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். பொன்மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டபோது வரவேற்பு தெரிவித்த வீரமணி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டவர்கள் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களை இயக்குவது சிலை கடத்தல் கும்பலாக இருக்குமோ? என்ற கேள்வி எழுகிறது” என தெரிவித்துள்ளார்.

vaiko

மேலும், தேசிய அளவில் அமைய இருக்கும் மூன்றாவது அணி பாஜகவிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் ஹெச்.ராஜா ஆருடம் தெரிவித்துள்ளார்.