வீண் பெருமையால் ஒரு பயனும் இல்லை
ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக்கன்று ஒன்று நடப்பட்டு இருந்தது. ஏற்கெனவே அந்த வாழைக்கன்றுக்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று தென்னங்கன்றிடம், ‘நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே?’ என்றது. ஒரு வருஷமாக இருக்கிறேன் என்றது தென்னங்கன்று.
ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக்கன்று ஒன்று நடப்பட்டு இருந்தது. ஏற்கெனவே அந்த வாழைக்கன்றுக்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று தென்னங்கன்றிடம், ‘நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே?’ என்றது. ஒரு வருஷமாக இருக்கிறேன் என்றது தென்னங்கன்று.
‘ஒரு வருஷம்னு சொல்றே, ஆனா என்னை விடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? உனக்கு ஏதாச்சும் வியாதியா?’ என்று தென்னங்கன்றை ஏளனம் செய்துவிட்டு, சிரித்தது. தென்னங்கன்றோ அதைக் காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது.
ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றை விட நன்கு செழித்து, உயரமாக வளர்ந்து விட்டது. வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது. தென்னங்கன்றோ எப்போதும் போல சலனமில்லாமல் புன்னகைத்தது.
வாழைக்கன்றை நட்டு ஒரு வருடம் ஆவதற்குள் தென்னங்கன்றை விட இரு மடங்கு உயரமாகி விட்டது. தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை. ‘கடவுளுக்கு உன்னை மட்டும் பிடிக்காதோ ? ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே! நீ இருக்குற மண்ணில் தான் நானும் இருக்கேன். உனக்கு கிடைக்கிற தண்ணி தான் எனக்கும் கிடைக்குது. ஆனா பாரு , நான் மட்டும் எப்படி வளந்துட்டேன். உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல!’ என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது.
வாழைக்கன்றின் கிண்டல் பேச்சுக்கு தென்னங்கன்றிடம் புன்னகையை தவிர வேறெந்த பதிலும் வரவில்லை. இன்னும் சிறிது காலம் சென்றது. அதிலிருந்து அழகான குலை வெளிப்பட்டது. அது பூவும் , காய்களுமாக அழகாக மாறியது. வாழைமரத்தின் பெருமை இன்னும் அதிகமானது. இரவும், பகலும் தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக் கழித்தது.
நல்ல உயரம், பிளவுபடாத அழகிய இலைகள், கம்பீரமான குலை என்று வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அந்த தோட்டத்திற்கு புதிதாய் வருபவர்கள் எல்லாம் வாழை மரத்தின் அருகில் சென்று தொட்டுப் பார்த்தனர். வாழைமரத்திற்கு பெருமை கொள்ளவில்லை.
இப்போது காய்கள் முற்றின . ஒரு மனிதன் தோட்டத்துக்கு வந்தான். வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான். வாழைக்காய்களைத் தட்டிப் பார்த்தான். தென்னைமரத்தைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை .இதை விட வேறென்ன பெருமை வேண்டும்? வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள் திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான். முதலாவது மனிதன் பிடித்துக் கொள்ள , அதன் குலைகளை வெட்டி எடுத்தான். வாழை மரம் கதறியது. அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது. மரண பயம் வந்துவிட்டது. அது பயந்தபடியே அடுத்த காரியமும் நடக்க ஆரம்பித்தது. ஆம் வாழைமரம் வெட்டி சாய்க்கப்பட்டது. ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. துண்டு துண்டாக வெட்டப் பட்டுத் தோலுறிக்கப் பட்டது.
தென்னை மரம் இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது. அதன் புன்னகைக்கு என்ன அர்த்தம் என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது. ஒவ்வொரு நாளும் நமக்கும் எத்தனை கேலிகள் இது போல? கவலைப்பட வேண்டாம். வேகமாக வளர்வதெல்லாம் , வேகமாகவே காணாமல் போகும். ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதன் முடிவு நல்லதாக இருக்க வேண்டும் என்பதில் தான் அக்கறை இருக்க வேண்டும். நாளைக்கு நம்முடைய வாழ்க்கையில் என்ன நடக்கும், அது எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது. அப்படியிருக்கும் போது பெருமைக் கொள்வதில் அர்த்தம் இல்லை.