வீட்லயும் பிக் பாஸ் நியாபகமாவே இருக்கு: ரீ-எண்ட்ரி கொடுத்த யாஷிகா, பாலாஜி!

 

வீட்லயும் பிக் பாஸ் நியாபகமாவே இருக்கு: ரீ-எண்ட்ரி கொடுத்த யாஷிகா, பாலாஜி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய யாஷிகாவும், பாலாஜியும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளனர்

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய யாஷிகாவும், பாலாஜியும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் உள்ளது, இன்னும் சில தினங்களில் பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிறைவடையவுள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் உள்ள இறுதிப்போட்டியாளர்கள் ஜனனி, ரித்விகா, விஜயலக்ஷ்மி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த இறுதி வாரத்தில் பிக் பாஸ் பைனல்ஸ் போட்டியாளர்களை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்த, இந்த சீசனில் இருந்து வெளியேறிய சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர். ஏற்கனவே என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, நித்யா, ஷாரிக் உள்ளிட்டோர் வந்தனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது இறுதியாக வெளியேறிய யாஷிகாவும், பாலாஜியும் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பான புரொமோ வீடியோவில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி வீட்டிற்கு போனதில் இருந்து பிக் பாஸ் நியாபகமாகவே இருப்பதாக யாஷிகா கூறுகிறார். வீட்டுக்கு போனதும் மைக் எடுத்து மாட்ட தோணுது, வீட்ல எல்லாரும் இங்கிலீஷில் பேசும்போது அமைதியா இருக்கேன் என யாஷிகா கூறுகிறார். இதேபோல் பாலாஜியும், தெருவில் நாய் கத்தினால், டேய் இன்னும் எவன் டா தூங்குறதுன்னு கேக்குறேன் என்று விளையாட்டாக பேசினார். இவர்களது வாழ்க்கையில் பிக் பாஸ் பெரிய மாற்றத்தை தான் ஏற்படுத்திருக்கிறது போல் தெரிகிறது.

யாஷிகாவின் பிரிவால் வாடிய ஐஸ்வர்யாவை பூஸ்ட் செய்யவே யாஷிகாவை வரவழைத்திருக்கிறார் போல பிக் பாஸ். மேலும், நித்யா வந்தபோது பாலாஜி மீது குப்பைக் கொட்டிய விவகாரத்தில் ஐஸ்வர்யா மனம் வருந்தியதால், ஆறுதல் கூற பாலாஜி வந்திருப்பார் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. பிக் பாஸ் மறைமுகமாக ஐஸ்வர்யா மீது தனி கவனம் செலுத்துவதால், இது அவரை டைட்டில் வின்னராக்கும் முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகம் மக்களிடத்தில் எழுந்துள்ளது.