வீட்டை விட்டு வெளியேறிய 16 வயது சிறுமி: பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்; அதிர வைக்கும் உண்மை!

 

வீட்டை விட்டு வெளியேறிய 16 வயது சிறுமி: பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்; அதிர வைக்கும் உண்மை!

சென்னையில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை சிலர் பாலியல்  தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை : வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை சிலர் பாலியல்  தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது  தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.அவரது தாய் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி சிறுமியின் தாய் கூலி வேலைக்குச் சென்றுவிடப் பாட்டியுடன் ஏற்பட்ட சண்டையினால் சிறுமி வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிகிறது. இதையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சிறுமியை காவல்துறையினர் தேடி  வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் சிறுமி வீடு திரும்பினார். 

harassment

இதைத் தொடர்ந்து சிறுமியிடம் போலீசார் நடத்திய  விசாரணையில், வீட்டை விட்டு செல்லும் வழியில் வியாசர்பாடியைச் சேர்ந்த   தோழி ஜெபினாவை சந்திதுள்ளார். அவரும் புளியந்தோப்பை சேர்ந்த முபினா பேகம், வேப்பேரியைச் சேர்ந்த நிஷா ஆகியோர் சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாக  கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.  பின்பு நிஷா தனது வீட்டில் சிறுமியை தங்க வைத்துள்ளார். மேலும் சிறுமிக்கு மதுவை குடிக்க வைத்து ஒரு அறையில் அடைத்துள்ளார். மயக்க நிலையிலிருந்த சிறுமியை  5 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இப்படி  3 நாட்களாக அந்த கும்பல் சிறுமியிடம்  அத்துமீறியுள்ளது. 

crime

இதையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், ஜெபினா, முபினா பேகம், நிஷா ஆகிய மூன்று பெண்களையும் கைது செய்த புளியந்தோப்பு போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் பாலியல் தொழில் செய்யும் இந்த கும்பல் வீட்டை விட்டு வெளியேறும் சிறுமிகளை இப்படி தவறான வழியில் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.