வீட்டை காலி செய்ய கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!

 

வீட்டை காலி செய்ய கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!

கடந்த ஆண்டு அக்டோபரில் அந்த வீட்டை அமலாக்கத்துறை முடக்கிய நிலையில் இன்னும் அந்த வீட்டை கார்த்தி சிதம்பரம் காலி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதை அடுத்து கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ள அமலாக்கத்துறை, 10 நாட்களில் வீட்டை காலி செய்யும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் முதலீடுகள் பெற தடையில்லாச் சான்று வழங்கியதில் முறைகேடு நடந்ததாக பதியப்பட்டுள்ள வழக்கில், அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி தொடர்புடைய நிறுவனம், விதிகளை மீறி உதவியதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் முடக்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் 76 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளில், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது தாய் நளினி பெயரில் டெல்லி ஜோர் பாக்கில் உள்ள வீடும் ஒன்று.

Karthi's House in Delhi

கடந்த ஆண்டு அக்டோபரில் அந்த வீட்டை அமலாக்கத்துறை முடக்கிய நிலையில் இன்னும் அந்த வீட்டை கார்த்தி சிதம்பரம் காலி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதை அடுத்து கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ள அமலாக்கத்துறை, 10 நாட்களில் வீட்டை காலி செய்யும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறையின் நோட்டீசை எதிர்த்து உடனடியாக கார்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.