வீட்டைவிட்டு வெளியே வந்தவர்களை ரோஜாப்பூ கொடுத்து வீட்டிற்கு அனுப்பிய போலீஸ்

 

வீட்டைவிட்டு வெளியே வந்தவர்களை ரோஜாப்பூ கொடுத்து வீட்டிற்கு அனுப்பிய போலீஸ்

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி கடந்த 3 தினங்களுக்கு முன் அழைப்பு விடுத்தார்.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி கடந்த 3 தினங்களுக்கு முன் அழைப்பு விடுத்தார். அதையடுத்து இன்று பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, இந்திய மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் தேசிய சாலைகள், நகர சாலைகள், கிராம தெருக்கள் உட்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. அனைத்து கடைகளும் விடுமுறை அறிவித்து விட்டன. 

போலீஸ்

மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் வீட்டில் தங்காமல் வெளியே இருந்த நபர்களுக்கு டெல்லி போலீஸ் ரோஜாப்பூ கொடுத்து அறிவுரை வழங்கிவருகின்றனர்.  வீட்டிற்கு சென்று சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வெளியே இருந்த நபர்களுக்கு டெல்லி காவல்துறை அறிவுறுத்தி வீட்டிற்கு அனுப்பியது.