வீட்டு வாசலில் ரத்தம் தெளிக்கும் மர்ம நபர்கள்! மரண பீதியில் மக்கள்!

 

வீட்டு வாசலில் ரத்தம் தெளிக்கும் மர்ம நபர்கள்! மரண பீதியில் மக்கள்!

madurai

தமிழகத்தில் அடிக்கடி வினோதமான சைக்கோ மனிதர்களின் நடமாட்டம் இருந்து வருகிறது. சென்னை நகர் முழுவதுமாக மூன்றாம் கண் திட்டத்தின் மூலமாக சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டப் பிறகு குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளன. அப்படியே குற்றங்கள் நிகழ்ந்தாலும், வெகு விரைவில் கண்காணிப்பு கேமிரா மூலமாக குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். 

blood

இந்நிலையில், மதுரையில் இரவில் தூங்கி எழுந்து அதிகாலையில் வீட்டுக் கதவைத் திறப்பவர்களை அதிர்ச்சியடைய செய்யும் விதமான வீட்டு வாசலில் ரத்தத்தைத் தெளித்து விட்டு செல்கிறது மர்ம குப்பல் ஒன்று. மதுரை மாவட்டம் பெரியகுளம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தினமும் இரவு நேரங்களில் வீடுகளின் முன்பாக மர்ம நபர்கள் சிலர் ரத்தத்தை தெளித்து விட்டுச் செல்வதாக புகார் எழுந்துள்ளது.  இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை நடத்தி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.