‘வீட்டுச் செலவுக்காகப் பணம் கேட்ட மனைவி’ : பிளேடால் கழுத்தை அறுத்த குடிகார கணவன்!

 

‘வீட்டுச் செலவுக்காகப் பணம் கேட்ட மனைவி’ : பிளேடால் கழுத்தை அறுத்த குடிகார கணவன்!

சக்கரையா தினமும் ஆட்டோ ஓட்டி விட்டு, மூக்கு முட்டக் குடித்து விட்டு வீட்டிற்கு வருவாராம்.

சென்னை கொளத்தூர் ஜி.கே.எம் காலணி 6வது தெருவில் சக்கரையா- பத்மினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் ஆட்டோ ஓட்டும் வேலை செய்து வருகிறார். இவருக்கு 4 மகள்களும் 1 மகனும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு இடத்தில் வசித்து வருகின்றனர். சக்கரையா தினமும் ஆட்டோ ஓட்டி விட்டு, மூக்கு முட்டக் குடித்து விட்டு வீட்டிற்கு வருவாராம். வீடு செலவுக்கு காசு கொடுக்காமல் தினமும் குடித்து வந்ததால், நேற்று பத்மினி அவரிடம் வீட்டு செலவுக்காகக் காசு கேட்டுள்ளார். 

sakaraya

குடிபோதையிலிருந்த சக்கரையா பத்மினியின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார். அதுமட்டுமின்றி, அருகில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து பலமாக தாக்கியுள்ளார். பதமினியின் அலறல் சத்தம் கேட்டு அவரின் வீட்டுக்கு சென்ற அக்கம்பக்கத்தினர் பத்மினியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். த

arestec

கவல் அறிந்த காவல் துறையினர் தலைமறைவான சக்கரையாவை தேடி வந்தனர். அதனையடுத்து,  பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த சக்கரையாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.