வீட்டுக்கு விலக்கான பெண்கள் வரலட்சுமி விரதம் இருக்கலாமா?

 

வீட்டுக்கு விலக்கான பெண்கள் வரலட்சுமி விரதம் இருக்கலாமா?

கேட்கும் வரங்களைத் தரும் மகாலட்சுமி தேவியை பூஜிப்பது தான் வரலட்சுமி நோன்பின் சிறப்பு. அதனால், வரலட்சுமி விரத தினத்தில் யார் வேண்டுமானாலும், அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன், மனதார தியானித்து அவளை சரணடையலாம். வீட்டுக்கு விலக்காகி நிற்கும் சுமங்கலி பெண்கள், இன்று வரலட்சுமி விரதம் மேற்கொள்ள முடியவில்லையே என்று கலங்க வேண்டாம்.

வீட்டுக்கு விலக்கான பெண்கள் வரலட்சுமி விரதம் இருக்கலாமா?

கேட்கும் வரங்களைத் தரும் மகாலட்சுமி தேவியை பூஜிப்பது தான் வரலட்சுமி நோன்பின் சிறப்பு. அதனால், வரலட்சுமி விரத தினத்தில் யார் வேண்டுமானாலும், அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன், மனதார தியானித்து அவளை சரணடையலாம். வீட்டுக்கு விலக்காகி நிற்கும் சுமங்கலி பெண்கள், இன்று வரலட்சுமி விரதம் மேற்கொள்ள முடியவில்லையே என்று கலங்க வேண்டாம். அப்படி வீட்டுக்கு விலக்காகி இருக்கும் பெண்கள், அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளலாம். அவர்களுக்கும் அதே பலன்களை நிச்சயம் மகாலட்சுமி அருள்வாள். மும்மூர்த்திகளில் ஒருவரான முத்து ஸ்வாமி தீட்சிதர், ‘வரலக்ஷ்மி நமஸ்துப்யம்’ க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றி முழுமையாக பாடியிருக்கிறார். 

பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதிக்க ஆரம்பித்தாள். அதனால், அவள் அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள். இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி பூஜையில் தொடங்கி, இந்த பூஜையை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். இந்த பூஜையைச் செய்யும் போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும். எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு உங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.