‘வீட்டுக்கு அனுப்ப, வாடகை கட்ட காசு இல்ல’.. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது !

 

‘வீட்டுக்கு அனுப்ப, வாடகை கட்ட காசு இல்ல’.. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது !

சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் கல்லூரி மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் கல்லூரி மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் தனிப்படை அமைத்து அம்பத்தூர் காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். தகவல் கிடைத்ததை போலவே 3 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். அவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

ttn

பீகாரைச் சேர்ந்த சுபேசவுத்ரி(46), திருநெல்வேலியைச் சேர்ந்த மகேஷ்(22) மற்றும் சுவர்ண வேலாயுதம்(22) 3 பேரும் கூட்டாகச் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். சுபேசவுத்ரி  அம்பத்தூரில் டீக்கடை நடத்தி வருகிறார். திருநெல்வேலியைச் சேர்ந்த அந்த இரண்டு பேரும் அம்பத்தூரில் ரூம் எடுத்துத் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். மகேஷும் சுவர்ண வேலாயுதமும், சுபேசவுத்ரியின் டீ கடைக்குத் தான் செல்வார்களாம். அதன் மூலம், இவர்களுக்குப் பழக்கம் ஏற்பட்டு ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.  

ttn

அவர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், வீடு வாடகை கட்ட , வீட்டிற்கு அனுப்பப் பணம் இல்லாததால் இந்த தொழிலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த 300 கிராம் கஞ்சா மற்றும் ரூ7,000 பணத்தைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களைச் சிறையில் அடைத்துள்ளனர்.