வீட்டில் துளசி மாடத்தை எந்த திசையில் வைக்க வேண்டும்? எப்போது வலம் வந்தால் அதிர்ஷ்டம்?

 

வீட்டில் துளசி மாடத்தை எந்த திசையில் வைக்க வேண்டும்? எப்போது வலம் வந்தால் அதிர்ஷ்டம்?

ஒவ்வொரு வீட்டிலும் முற்றத்தில் துளசி மாடம் இருந்தால் நல்லது. ஆனால், பெரும்பாலும் புறாக் கூண்டுகளைப் போல அபார்ட்மெண்ட் வாழ்க்கையாகி விட்ட மாநகரத்தில் முற்றங்களை எல்லாம் கனவுகளிலும் யோசித்துக் கொண்டிருக்க முடியாது.

ஒவ்வொரு வீட்டிலும் முற்றத்தில் துளசி மாடம் இருந்தால் நல்லது. ஆனால், பெரும்பாலும் புறாக் கூண்டுகளைப் போல அபார்ட்மெண்ட் வாழ்க்கையாகி விட்ட மாநகரத்தில் முற்றங்களை எல்லாம் கனவுகளிலும் யோசித்துக் கொண்டிருக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் முற்றங்கள் இல்லையென்றாலும், துளசி செடியை கிழக்கு திசையில், தரைமட்டத்தில் வைத்தால் நல்லது. இப்படி கிழக்கு திசையில் துளசி செடியை வைத்து வழிபட்டு வணங்கி வருவது பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

tulsi

வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து, அங்கே துளசி மாடத்தை வைத்தாலும் நல்ல பலன்களே கிடைக்கும். அதே சமயம் துளசி மாடம் வீட்டு வாசலுக்குக் குத்தலாக அமையக் கூடாது. ஆண்டு முழுவதும் பசுமையாக இருக்கும் மரங்களை வைத்து, வீட்டினுள் வளர்த்தால் ஆயுள் நீடிக்கும். இலை உதிர்க்கும் மரங்கள் ஓரளவு தான் நற்பலனை கொடுக்கும். சில மாதங்கள் மட்டுமே வாழக்கூடிய மரங்களை வளர்க்காமல் இருப்பது நல்லது. பொதுவாக மற்ற அனைத்து செடிகளையும் விட துளசி, அதிகளவில் ஆக்ஸிஜனை வெளியேற்றும் சக்தி கொண்டது. அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து முடித்து, துளசியை வழிபட்டு வந்தால், ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் தானாய் வந்து சேரும். உங்களால் வலம் வர முடியாவிட்டாலும், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் துளசி செடியினருகே அமருங்கள்.