வீட்டில் தீபாவளி பட்டாசு வெடித்து 3 பேர் பலி: காஞ்சிபுரத்தில் சோகம்

 

வீட்டில் தீபாவளி பட்டாசு வெடித்து 3 பேர் பலி: காஞ்சிபுரத்தில் சோகம்

தீபாவளிக்கு விற்பனை செய்ய வைத்திருந்த பட்டாசு வெடித்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம்: தீபாவளிக்கு விற்பனை செய்ய வைத்திருந்த பட்டாசு வெடித்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் நாகலு தெருவில் தான் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மொத்தமாக விற்பனை செய்ய அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நாட்டு வெடி பட்டாசுகளை வாங்கி குவித்து வைத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று மதியம் திடீரென ஏற்பட்ட விபத்தில் நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில் பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.