வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டல்.. தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களுக்கு வலைவீச்சு !

 

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டல்.. தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களுக்கு வலைவீச்சு !

சென்னை பீர்க்கங்கரணை பகுதியில் வசித்து வரும் சித்ரா என்னும் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

வழிப்பறி, பணம் பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சமீபத்தில் சென்னை, சென்னை வால்டாக்ஸ் சாலையில் ஆந்திரா தங்க நகை வியாபாரியிடம் 4.3 கிலோ தங்கம் பறித்துச் சென்ற வழக்கில் 4 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் கடந்த ஆண்டு சென்னையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஈரானியர்கள் என்பது தெரிய வந்தது.

 

ttn

இந்நிலையில், சென்னை பீர்க்கங்கரணை பகுதியில் வசித்து வரும் சித்ரா என்னும் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்துள்ளார். திடீரென பைக்கில் வந்த இரண்டு பேர், அவரின் வீட்டில் உள்ளே புகுந்து பணம் கொடுக்கும் படி மிரட்டியுள்ளனர். அதன் பின்னர், சித்ராவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தாலி சங்கிலி, 2 செல்போன் உள்ளிட்ட பொருட்களைப் பறித்துச் சென்றுள்ளனர். அதே போல, மாலை 6 மணிக்குப் பழைய பெருங்களத்தூர் பகுதியில் வசிக்கும் உஷா என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

ttn

அதுமட்டுமில்லாமல், அவ்வழியே சென்ற நபர் ஒருவரின் செல்போனை பறித்துச் சென்றனர். அந்த இரண்டு ஒரே பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது ஒரு வீட்டின் சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளதால் அதனை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கொள்ளையிலும் ஈரானியர்கள் ஈடுபட்டிருப்பார்களோ என்றும் சந்தேகிக்கப் படுகிறது.