வீட்டில் சுக்கு இருந்தால் இத்தனை நோய்களை விரட்டலாம்

 

வீட்டில் சுக்கு  இருந்தால் இத்தனை நோய்களை விரட்டலாம்

காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என தினமும் இந்த மூன்றையும் நாம் உடலில் சேர்த்துக் கொண்டால், நோய் நம் அருகில் கூட வராது என்பது உங்களுக்கு தெரியுமா? இஞ்சியை நன்றாக காய வைத்து, அதனுள் இருக்கும் நீரை வற்ற வைத்தால் சுக்கு கிடைத்து விடும். ஆனால் காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என்கிற வரிசையில் தான் உட்கொள்ள வேண்டும். 

காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என தினமும் இந்த மூன்றையும் நாம் உடலில் சேர்த்துக் கொண்டால், நோய் நம் அருகில் கூட வராது என்பது உங்களுக்கு தெரியுமா? இஞ்சியை நன்றாக காய வைத்து, அதனுள் இருக்கும் நீரை வற்ற வைத்தால் சுக்கு கிடைத்து விடும். ஆனால் காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என்கிற வரிசையில் தான் உட்கொள்ள வேண்டும். 

dry ginger

எத்தகைய உணவையும் செரிக்க வைத்து விடும் சக்தி சுக்குவிற்கு உண்டு. நச்சுக்களை முறித்துவிடும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தப்படுத்தும். சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். பித்த உடல் வாகு உடையவர்கள், சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். 
சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் சேர்த்து கஷாயம் செய்து தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் எப்படிப்பட்ட கடுமையான சளியாக இருந்தாலும் மூன்றே நாட்களில் குணமாகி விடும். சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும். சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்த வழியே போய்விடும். நீரை வற்றச் செய்து விடுகிற ஆற்றல் சுக்குவிற்கு உள்ளதால், தலையில் கோர்த்திருக்கும் நீரை எடுத்து விடுகிறது.

dry ginger

சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, காய்ச்சிக் குடித்து வந்தால் உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும். நாம் பருகும் தேநீருக்கு பதிலாக இதைப் பயன்படுத்தலாம். சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும். சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும். சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்து தொண்டை மீது வெளிப்புறத்தில் பூசி வந்தால் தொண்டைக் கட்டு மாறி குரல் இயல்பு நிலைக்கு வந்துவிடும்.  சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழிந்து விடும். சுக்குடன், கொத்தமல்லி இலையைச் சேர்த்து கஷாயம் வைத்து குடித்து வந்தால் எப்படிப்பட்ட மூலநோயாக இருந்தாலும் நல்ல பலன் தரும். சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

dry ginger

தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.
சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும். சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும். சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும்.