வீட்டிலேயே திருமணம் செய்து கொண்ட ஜோடி – போலீசார் கைதட்டி வாழ்த்து தெரிவிப்பு

 

வீட்டிலேயே திருமணம் செய்து கொண்ட ஜோடி – போலீசார் கைதட்டி வாழ்த்து தெரிவிப்பு

வீட்டிலேயே திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு போலீசார் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

நாசிக்: வீட்டிலேயே திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு போலீசார் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கையில் நாடு முழுவதிலுமிருந்து வெளியாகும் துன்பகரமான கதைகளுக்கு மத்தியில் மகாராஷ்டிராவிலிருந்து ஒரு இதயத்தைத் தூண்டும் வீடியோ வெளியாகியுள்ளது. நாசிக் நகரில் உள்ள போலீசார் புதுமணத் தம்பதியினருக்கு மனதைக் கவரும் வரவேற்பை கொடுத்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட கிட்டத்தட்ட இரண்டு நிமிட வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. ஒரு போலீஸ்காரர் பல போலீசாருக்கு நடுவில் தெருவில் நின்று ஒலிபெருக்கி மூலமாக புதுமணத் தம்பதியை வாழ்த்தினார். ஏனெனில் அந்த ஜோடி மிகக் குறைவான குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் தங்கள் வீட்டிலேயே திருமணத்தை நடத்தினர். அந்த தம்பதியினர் தங்கள் வீட்டின் பால்கனியில் நின்று போலீசாரின் வாழ்த்தை பெற்றுக் கொண்டனர். ஒரு பாலிவுட் திரைப்படத்தின் ஒரு பாடலை போலீசார் ஒலிக்கவிட்டு தம்பதியினருக்கு கைதட்டல் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.