வீட்டின் சுவர்களுக்கிடையே சிக்கித் தவித்த சிறுவன்.. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் மீட்பு !

 

வீட்டின் சுவர்களுக்கிடையே சிக்கித் தவித்த சிறுவன்.. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் மீட்பு !

பள்ளிகள் அனைத்தும் விடுமுறை என்பதால், நித்திஷ் அவனது நண்பர்களுடன் வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் மொண்டியம்மன் நகரைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கு 12 வயதில் நித்திஷ் என்ற மகன் உள்ளார். அந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கமாக, பள்ளி முடிந்தவுடன் நித்திஷ் வீட்டின் அருகே விளையாடுவது வழக்கமாம். நேற்று பள்ளிகள் அனைத்தும் விடுமுறை என்பதால், நித்திஷ் அவனது நண்பர்களுடன் வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். 

ttn

விளையாடிக் கொண்டிருந்த நேற்று இரவு 7 மணி அளவில், வீட்டின் சுவருக்கும் வீட்டின் சுற்றுப்புற சுவருக்கும் இடையே சிக்கிக் கொண்டுள்ளார். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், நித்திஷ் சுவரில் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனை வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர். சுவர் மிகவும் குறுகியதாக இருந்ததால் சிறுவனை மீட்க முடியாமல் அக்கம் பக்கத்தினர் தவித்துள்ளனர்.

tttn

இதனிடையே நித்திஷ் வலியால் துடித்துள்ளான். அதன் பின்னர், பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். நித்திஷ் வீட்டுக்கு விரைந்து வந்த செங்குன்றம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நித்திஷை மீட்டுள்ளனர்.