வீடியோவால் வந்த விபரீதம்!  4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்!! 

 

வீடியோவால் வந்த விபரீதம்!  4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்!! 

மலேசியாவில் 4 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மலேசியாவில் 4 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பேராக் என்ற பகுதியில் உள்ளா 12 வயது சிறுவன் ஒருவன் பாலியல் தொடர்பான காணொளிகளை செல்போனில் பார்த்துள்ளான். இதையடுத்து தனது அருகே இருந்த பார்த்து 4 வயதுச் சிறுமியை வன்கொடுமை  செய்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அவர், மூன்று முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சிறுமி உடலின் சில பாகங்களில் வலி இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து சிறுமியின் தாய் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தான் இந்த கொடுமை தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுவன் தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சிறுமியின் தாய் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார். 

இதைதொடர்ந்து அந்த சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது  அந்த சிறுவனும் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதையடுத்து அந்த சிறுவனை கைது செய்த காவல்துறையினர் வரும் 5ஆம் தேதிவரை சிறுவனைத் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.