வீச்சரிவாளுடன் சாலையில் அலப்பறை செய்த நபர்! ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

 

வீச்சரிவாளுடன் சாலையில் அலப்பறை செய்த நபர்! ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கரூர் அருகே சாலையில் வீச்சரிவாளுடன் அலப்பறை செய்த போதை ஆசாமியால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே இளைஞர் ஒருவர் மிகப்பெரிய வீச்சரிவாளுடன் சாலையில் நின்று போகும் வரும் வாகனங்களுக்கு இடையூறு செய்துகொண்டிருந்தார்.

கரூர் அருகே சாலையில் வீச்சரிவாளுடன் அலப்பறை செய்த போதை ஆசாமியால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே இளைஞர் ஒருவர் மிகப்பெரிய வீச்சரிவாளுடன் சாலையில் நின்று போகும் வரும் வாகனங்களுக்கு இடையூறு செய்துகொண்டிருந்தார்.சிறிது நேரத்துக்குப் பிறகு, சாலையின் குறுக்கே அரிவாளுடன் நின்றுகொண்டு வாகனங்களை தடுத்து நிறுத்தினார். கையில் மிகப்பெரிய அரிவாள் இருந்ததால் யாரும் அவரை தடுக்க முயலவில்லை. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

man

இது குறித்து தகவல் அறிந்த அந்த வாலிபரின் உறவினர்கள் விரைந்துவந்து சமாதானம் செய்து அவரை அழைத்துச் சென்றனர். அவர்கள் சென்ற பிறகே வழக்கம் போல போலீசார் வந்துள்ளனர். இது குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் யார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், போதையிலிருந்தார் என்று கூறப்படுகிறது.

man

கையில் அரிவாளுடன் அவர் வீர வசனம் பேசும் காட்சியை பலரும் தங்கள் மொபைல் போனில் ரெக்கார்ட் செய்துள்ளனர். சிலர் அதை சமூக ஊடகங்களில் தற்போது பகிர்ந்து வருகின்றனர். இளைஞர் அரிவாளுடன் சாலையில் தகராறு செய்யும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது