விஸ்வ இந்து மகாசபா மாநிலத் தலைவர் சுட்டுக்கொலை… மக்கள் பதற்றம்!
இந்த தாக்குதலின் போது ரஞ்சித் பச்சனின் சகோதரருக்கும் குண்டு காயம் ஏற்பட்டது.
விஸ்வ இந்து மகாசபா மாநிலத் தலைவர் ரஞ்சித் பச்சன். கோரக்பூரில் வசித்து வரும் இவர் இன்று காலை லக்னோ ஹஸ்ரத் கஞ்சி பகுதியிலுள்ள சி.டி.ஆர்.ஐ கட்டிடத்தின் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ரஞ்சித் பச்சனை துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் வீழ்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த தாக்குதலின் போது ரஞ்சித் பச்சனின் சகோதரருக்கும் குண்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய லக்னோவின் டி.சி.பி தினேஷ் சிங், ரஞ்சித் பச்சன் கொலை வழக்கில் போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று விமர்சித்துள்ள சமாஜ்வாடி கட்சி
முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.