விஸ்வாசம் படப்பிடிப்பில் நடந்த சோகம்: அஜித் என்ன செய்தார் தெரியுமா?

 

விஸ்வாசம் படப்பிடிப்பில் நடந்த சோகம்: அஜித் என்ன செய்தார் தெரியுமா?

விஸ்வாசம் படப்பிடிப்பு தளத்தில் உடல்நிலை குறைவால் நடனக்கலைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை: விஸ்வாசம் படப்பிடிப்பு தளத்தில் உடல்நிலை குறைவால் நடனக்கலைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் விஸ்வாசம்  படத்தின் படப்பிடிப்பு புனே பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டபோது, நடனக்கலைஞர்களுள் ஒருவரான ஓம் சரவணன் என்பவருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. அவர் தொடர்ந்து வாந்தி எடுக்கவே, அவரை சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் அஜித்தும், மற்ற நடனக்கலைஞர்களும் உடன் சென்றுள்ளனர். நடிகர் அஜித் சுமார் 3 மணி நேரம் மருத்துவமனையில் இருந்துள்ளார். ஆனால்,  சிகிச்சை பலனின்றி  இறுதியில் அவர் உயிரிழந்ததையடுத்து நடிகர் அஜித் மிகுந்த வருத்தமடைந்துள்ளார்.

இதையடுத்து அவரது உடல் சென்னை வர அஜித் உதவி செய்ததோடு, அவரது குடும்பத்திற்கு நடிகர் அஜித் 8 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார். நடனக்கலைஞர் உயிரிழந்தது ஒருபக்கம் வருத்தமளித்தாலும், நடிகர் அஜித்தின் இந்த உதவிக்கு படக்குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.