விஸ்வாசம்.. தந்தையை கொளுத்திய அஜீத்குமார்

 

விஸ்வாசம்.. தந்தையை கொளுத்திய அஜீத்குமார்

விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால் அப்பாவை பெட்ரோல் ஊற்றி மகன் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

வேலூர் : விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால் அப்பாவை பெட்ரோல் ஊற்றி மகன் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்கள், அவருக்கு தங்களது விஸ்வாசத்தை காட்டும் விதமாக பேனர், பட்டாசு என அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.மேலும் தல தரிசனத்திற்காக சிறப்பு காட்சிகளை காண நள்ளிரவு முதலே அவரது ரசிகர்கள் தியேட்டர்கள் முன் கூடிவிட்டனர்.

ajithkumar

இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடியில் தல அஜீத்தின் தீவிர ரசிகரான அஜித்குமார் என்பவர் விஸ்வாசம் படம் பார்ப்பதற்காக, தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால்  அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். எனவே முதல் நாள் முதல் காட்சி பார்க்க முடியாத விரக்தியில் இருந்த அஜித்குமார், தூங்கிகொண்டிருந்த தனது தந்தை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், படுகாயமடைந்த அஜீத்தின் தந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்