விஸ்வாசம் டிக்கெட் கிடைக்காததால் தல ரசிகர் விரக்தி: என்ன செய்தார் தெரியுமா? 

 

விஸ்வாசம் டிக்கெட் கிடைக்காததால் தல ரசிகர் விரக்தி: என்ன செய்தார் தெரியுமா? 

தல அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் ரசிகர் ஒருவர் பணத்தை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை: தல அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் ரசிகர் ஒருவர் பணத்தை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ வரிசையில் 4வது முறையாக இயக்குநர் சிவா-அஜித் கூட்டணியில் உருவாகியுள்ளது ‘விஸ்வாசம்’ திரைப்படம். இதில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆக தயாராகவுள்ளது. திரையரங்குகளின் முன் ‘தல’ மீதான தங்களின் விஸ்வாசத்தை காட்ட, அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

thala

மேலும் தல ரசிகர்கள் பட்டித்தொட்டி எங்கும் பேனர் வைத்து பட்டயைகிளப்பி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கத்தில் அஜித் உருவத்தை முற்றிலும் வாட்டர் பாட்டில்களால் செய்யப்பட்ட பேனர் வைத்து தல ரசிகர்கள் மாஸ் காட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி 185 அடி கட்-அவுட்,108 அடி போஸ்டர் என தல ரசிகர்கள் இந்த முறை வேற லெவல் கொண்டாட்டத்திற்குச் சென்றுள்ளனர். 

banner

இந்நிலையில் இப்படத்தின் புக்கிங் ஓபன் செய்து சூடு பிடித்துள்ள நிலையில்,தாம்பரத்தில் உள்ள பிரபல வித்யா தியேட்டரில் விஸ்வாசம் படத்திற்கான டிக்கெட் விற்பனை நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த தல ரசிகர் ஒருவருக்கு முதல் நாள், முதல் காட்சிக்கான டிக்கெட் கிடைக்காமல் போனது. 

இதனால் விரக்தி அடைந்த அந்த ரசிகர் 600ரூபாய் தாள்களை கிழித்து எரிந்து, ‘தலக்காக’ என்று கத்தி சென்றுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகிவருகிறது