விஷ சாராயம் குடித்து 17 பேர் பலி; 11 பேருக்கு தீவிர சிகிச்சை!
Mar 17, 2020, 07:31 IST1584410498000
தனுசா மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் வீட்டிலேயே மது தயாரித்துக் குடித்துள்ளனர்.
ஹோலி பண்டிகையையொட்டி கடந்த 10 ஆம் தேதி நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள தனுசா மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் வீட்டிலேயே மது தயாரித்துக் குடித்துள்ளனர்.
இதில் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சில மணிநேரங்களிலேயே 28 பேர் வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் 17 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். மேலும் மீதமுள்ள 11 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.