விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன்!
Sep 13, 2019, 14:52 IST1568366554000
பணிச்சுமை அதிகமாக இருந்ததால் தனக்கு தானே விஷ ஊசி போட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டார் மாணவர் உதயராஜ்.
பணிச்சுமை அதிகமாக இருந்ததால் தனக்கு தானே விஷ ஊசி போட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டார் மாணவர் உதயராஜ்.
மதுரை ராஜாஜி கல்லூரியில் மயக்கவியல் இரண்டாம் ஆண்டும் படித்து வருகிறார் உதயராஜ். இவர் தனது நண்பர்களுடன் மதிச்சியம் முனிசிபல் காலனியில் தங்கி வந்தார். இன்று காலை இவர் திடீரெனெ விஷ ஊசி போட்டுக் கொண்டு இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியானது.
விரைந்து சென்ற போலீசார் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இருந்த ரூமில் சோதனையிட்டதில் அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதிக பணிச்சுமை இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அந்த கடிதத்தில் எழுதியிருந்தது. அதனையடுத்து, காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.