விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்ட அரசு பெண் மருத்துவர்!

 

விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்ட அரசு பெண் மருத்துவர்!

இதையடுத்து அவரது பெற்றோர் சிகிச்சைக்காக புனிதவதியை  அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

திருச்சி காந்திமார்க்கெட் தாராநல்லூரில் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்.  அரிசி ஆலை  நடத்தி வருகிறார். இவருக்கு புனிதவதி என்ற பெண் உள்ளார். இவர் எம்.பி.பி.எஸ், எம்.டி. படித்துவிட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். 

ttn

இந்நிலையில் நேற்று முன்தினம் டாக்டர் புனிதவதியின் பெற்றோர், கோயிலுக்கு சென்றுவிட்ட நிலையில் இரவு வீடு திரும்பினர். அப்போது புனிதவதி அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதனால் அவர் படிக்கிறார் என்று நினைத்துள்ளனர். ஆனால் நள்ளிரவு 1 மணியை தாண்டியும் அறையில் மின் விளக்கு அணைக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை தட்ட கதவை திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து பார்த்தபோது புனிதவதி மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் அருகில் ஒரு ஊசியும், மருந்து பாட்டிலும் கிடந்தது. இதையடுத்து அவரது பெற்றோர் சிகிச்சைக்காக புனிதவதியை  அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை  பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து  விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருச்சி காந்திமார்க்கெட் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

ttn

இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் புனிதவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், டாக்டர் புனிதவதி சென்னையில் மருத்துவ படிப்பு படித்த போது ஒருவரை ஒருவரை காதலித்துள்ளார்.ஆனால்  அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் விஷ ஊசி போட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. 

முன்னதாக இதேபோல் திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவர்  ஒருவர் மருத்துவமனையில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.