விஷால் தந்தை கொடுத்த மோசடி புகார்: கல்குவாரி உரிமையாளர் கைது !

 

விஷால் தந்தை கொடுத்த மோசடி புகார்: கல்குவாரி உரிமையாளர் கைது !

நடிகர் விஷாலின் தந்தையிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த கல்குவாரி அதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் விஷாலின் தந்தையிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த கல்குவாரி அதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

vishal

நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே ரெட்டி. பிரபல தயாரிப்பாளரான இவர்  அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  இவர் பிசாசு படத்தின் கன்னட ரீமேக்கான ராக்ஷஸி என்ற படத்தில் முதல் முறையாக ராதாரவி கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து தமிழில் நேத்ரா என்ற படத்தில் நடித்துள்ளார். 

arrested

இந்நிலையில் தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டி  மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில்,  தொழிலதிபர் வடிவேலு என்பவர் தன்னுடைய குவாரிக்கு கருங்கல், ஜல்லி தருவதாகக் கூறி  தன்னிடம் ரூ. 86 லட்சம் பணம் வாங்கினார். ஆனால்  அவர் மேற்சொன்ன படி குவாரிக்கு கருங்கல், ஜல்லி அனுப்பி வைக்கவில்லை. பணம் கேட்டாலும் இழுத்தடித்து வருகிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

இதையடுத்து விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மத்திய குற்ற பிரிவு போலீசார், மதுரையைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் வடிவேலுவை  கைது செய்து விசாரித்து வருகின்றனர்.