விஷாலின் சுயநலமே பாண்டவர் அணி உடைய காரணம்-  நடிகர் ஆரி

 

விஷாலின் சுயநலமே பாண்டவர் அணி உடைய காரணம்-  நடிகர் ஆரி

விஷால் தலைமையிலான பாண்டவர் அணி உடைவதற்கு காரணம் விஷால் சுயநலமாக நடந்துகொண்டே காரணம் என நடிகர் ஆரி தெரிவித்துள்ளார். 

விஷால் தலைமையிலான பாண்டவர் அணி உடைவதற்கு காரணம் விஷால் சுயநலமாக நடந்துகொண்டே காரணம் என நடிகர் ஆரி தெரிவித்துள்ளார். 

நடிகர் சங்க இடத்தை மீட்டுக் கட்டித்தை கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்து  கடந்த தேர்தலை சந்தித்து பாண்டவர் அணி வெற்றியும்  பெற்றது. வெற்றி பெற்ற பாண்டவர் அணியின் பொது செயலாளர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு முன்பாகவே தயாரிப்பாளர் சங்கத்  தேர்தலை சந்தித்தார்  விஷால். இதனால் அந்த அணியில் உள்ளவர்களே விஷால் மீது ஒரு அதிருப்தி ஏற்பட்டது. 

அதன்பிறகு சங்க உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் நடிகர் சங்க பதவிகாலம் முடியும் முன்பே ஆர் கே நகர் இடைதேர்தலில் நிற்கும் முடிவை  எடுத்தார். விஷால் தன்னிச்சையாக முடிவெடுத்தால் பாவேந்தர் அணியினர் மேலும் அதிருப்தி அடைந்தனர். இதன் எதிரொலியாக சங்கத்தின் துணைத்தலைவர் பொண்வண்ணன் ராஜினாமா செய்தார்.

பொது தேர்தலில் நிற்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் ஆனால் எங்களின் பிரதிநிதியாக தேர்தெடுக்கப்பட்ட விஷால் அடிகர் சங்க பதிவிக்காலம் முடியும் முன்னரே அரசியலில் நின்றால் அரசுக்கும் சங்கத்திற்குமான உறவு பாதிக்கப்படும். எனவே நடிகர் சங்க பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் குதித்திருக்கலாம் என நடிகர்சங்க நிர்வாகிகள் ஆலோசனைகளை வழங்கினர். இதனை விஷாலும் நாசர்  தலைமையிலான அணியும் ஏற்றுக்கொள்ள வில்லை 

மேலும் குறிப்பிட்ட காலத்தில் கட்டிடத்தை கட்டாததாலும் அதிருப்தி ஏற்பட்டது. நாடக நடிகர்கள் தான் வேட்பாளராக களம் இறங்க வேண்டும்  என ஐசரி கணேஷ் தன் சொந்த பணத்தில் கட்டிடம் கட்டுவதாக கூறியிருக்கிறார். அடுத்த தலைமுறைக்கு சங்கம் பதவிகளை விஷால் போன்றோர்  தன் சுய லாபத்திற்காக  தவறாக பயன்படுத்த கூடாது என்பதற்காக  சங்கரதாஸ் அணி உருவாகியுள்ளதாக ஆரி கூறினார்.