விஷாலின் ஆக்‌ஷனுக்கு பேனர் வேண்டாம்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

 

விஷாலின் ஆக்‌ஷனுக்கு பேனர் வேண்டாம்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

அதன்படி சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் ரிலீஸின் போதும் பேனர்கள் வைக்கப்படவில்லை. 

நடிகர் விஷால் நடிப்பில்  வெளியாகவுள்ள ஆக்‌ஷன் திரைப்படத்திற்கு பேனர் மற்றும் கட் அவுட் வைக்க வேண்டாம் என்று புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் அறிவித்துள்ளது. 

vishal

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் நிலைதடுமாறி விழுந்தார். அப்போது  அவருக்குப்  பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இனி   திமுக, அதிமுக ஆகிய தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளும், நடிகர்களும்   எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் ரிலீஸின் போதும் பேனர்கள் வைக்கப்படவில்லை. 

vishal

இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில், விஷால், தமன்னா நடித்துள்ள ஆக்‌ஷன் படம் வரும் 15 ஆம் தேதி வெளியாகிறது.

vishal

 

இதுகுறித்து  புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம்  சார்பில் வெளியான அறிக்கையில், ‘ ஆக்‌ஷன்  படத்துக்கு பேனர், கட் அவுட் வைக்க வேண்டாம். அதற்காகும் செலவை ஏழை, எளியோருக்கு உதவுங்கள் என்று அந்த இயக்கத்தின்  செயலாளர் வி.ஹரிகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.