‘விஷம் குடித்த தாய்…இறந்து பிறந்த 5 மாத சிசு’ : அடுத்த சில நாட்களில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

 

‘விஷம் குடித்த தாய்…இறந்து பிறந்த 5 மாத சிசு’ : அடுத்த சில நாட்களில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

ராஜேஷுக்கும் துளசிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு  வந்துள்ளது.  இதனால் துளசி கோபித்துக்கொண்டு  தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் பெங்களூரை சேர்ந்த துளசி என்பவருக்கும்  சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. துளசி 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ராஜேஷுக்கும் துளசிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு  வந்துள்ளது.  இதனால் துளசி கோபித்துக்கொண்டு  தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். 

ttn

இதையடுத்து கடந்த 5 ஆம் தேதி துளசி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிமருந்தை குடித்துள்ளார்.  இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர் அவரை உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு துளசிக்கு கடந்த 7 ஆம்  தேதி காலை ஆண்  குழந்தை ஒன்று  இறந்து பிறந்தது. 

ttn

இந்நிலையில் நேற்று காலை துளசியும் சிகிச்சை பலனளிக்காமல்  உயிரிழந்து விட்டார்.  இதுகுறித்து பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  துளசியின் பெற்றோர் மற்றும் கணவர் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.