விஷம் கலந்த தண்ணீர்.. துடிதுடித்து உயிரிழந்த ஆடு, மாடுகள் !

 

விஷம் கலந்த தண்ணீர்.. துடிதுடித்து உயிரிழந்த ஆடு, மாடுகள் !

பெருமாள் அவரது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் படி அதே ஊரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவரிடம் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உள்ள குளத்துப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் 17 ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கமான ஒன்று தான். அதே போல, பெருமாள் அவரது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் படி அதே ஊரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவரிடம் கூறியுள்ளார்.

tttn

அதனால், ஜெயபிரகாஷ் அந்த அனைத்து ஆடுகளையும் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேய்ச்சலுக்குச் சென்று திரும்பி வந்த ஆடுகள் தாகத்தால், பெருமாள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரைக் குடித்துள்ளன. உடனே அந்த ஆடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாகத் துடிதுடித்து உயிரிழந்துள்ளன. 

tt

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெருமாள் வீட்டின் அருகே இருந்தவர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். அப்போது அவ்வழியே மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்த மாரிமுத்து என்பவர், ஆடுகளுக்கு என்ன ஆனது என்று விசாரித்துக் கொண்டிருந்துள்ளார். இதனிடையே அவரது மாடுகளும் அந்த தண்ணீரைக் குடித்ததால் உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாரிமுத்துவும், பெருமாளும் போலீசுக்கு தகவல் கொடுக்க, தண்ணீரில் விஷம் கலந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.