விவசாயி வைத்திருந்த வெங்காயத்தை களவாடி சென்ற மர்ம நபர்கள்! 

 

விவசாயி வைத்திருந்த வெங்காயத்தை களவாடி சென்ற மர்ம நபர்கள்! 

பெரம்பலூர் அருகே விவசாயி, தனது வயலில் விதைப்பதற்காக வைத்திருந்த வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் அருகே விவசாயி, தனது வயலில் விதைப்பதற்காக வைத்திருந்த வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கூத்தனூர் கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற விவசாயி தனது வயலில் விதைப்பதற்காக 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ சின்ன வெங்காயத்தை தனது குடோனில் வைத்திருந்தார். வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருந்ததை பார்த்த மர்ம நபர்கள் சிலர் முத்துகிருஷ்ணன் வைத்திருந்த வெங்காய மூட்டைகளை திருடி சென்றனர்.

Onion

இதையடுத்து முத்துகிருஷ்ணன் கூத்தனூர் காவல்நிலையத்தில் வெங்காயம் திருட்டுப்போனது குறித்து புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.