விவசாயிகளின் மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்போம்: ம.பி., தேர்தல் அறிக்கை வெளியீடு

 

விவசாயிகளின் மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்போம்: ம.பி., தேர்தல் அறிக்கை வெளியீடு

மத்தியப் பிரதேச மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 28-ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து அங்கு ஆட்சியை பிடிக்கும் பொருட்டு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அடுத்த  ஆண்டு நடைபெற்றவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பாரக்கப்படும் மத்தியப் பிரதேச மாநில சட்டபேரவை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்போம். பெட்ரோல் – டீசல் விலைகள் குறைக்கப்படும். ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் கோசாலைகள் திறக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.