விவகாரத்து வழக்கு: நீதிமன்றத்தில் அடம்பிடித்த நடிகை அதிதி மேனன்; கடுப்பான நீதிபதி!

 

விவகாரத்து வழக்கு:  நீதிமன்றத்தில் அடம்பிடித்த நடிகை அதிதி மேனன்; கடுப்பான நீதிபதி!

 நாளடைவில் கருத்து வேறுபாடு காரணமாக முட்டிக்கொண்ட இவர்கள் மீடியா முன்னிலையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டி தீர்த்து கொண்டனர்.

மதுரை: விவாகரத்து வழக்கு விவகாரத்தில்  நடிகை அதிதி மேனனை மதுரை குடும்ப நல நீதிமன்றம் கண்டித்துள்ளது.

abi

‘பட்டதாரி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி மேனன்.அந்தப் படத்தில் நடித்தபோது,அதில் நடித்த அபி சரவணன் இருவரும் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.பின்பு இருவரும் திருமணமும்  செய்துகொண்டுள்ளனர். ஆனால்  நாளடைவில் கருத்து வேறுபாடு காரணமாக முட்டிக்கொண்ட இவர்கள் மீடியா முன்னிலையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டி தீர்த்து கொண்டனர்.

aditi

அபிக்கு ஏகப்பட்ட பெண்களோடு தொடர்பு இருக்கு. என்கிட்டே ஏகப்பட்ட பணத்தை ஆட்டைய போட்டுட்டு ஏமாத்திட்டார் என்று  கமிஷனர் ஆபிஸ் ஏறினார் அதிதி மேனன். பின்பு அவருடன் எனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறினார். இதனால் கடுப்பான அபி சரவணன், அபிக்கு தாலி கட்டும் வீடியோ, நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் என அனைத்தையும் தட்டிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  ஒருவழியாக இவர்கள் பிரச்சனை நீதிமன்றத்தை எட்டியது.  நடிகை அதிதி மேனன் கடந்த சில ஆண்டுகளாக விவகாரத்து வழக்கில் ஆஜராகாமலிருந்து வந்தார். 

aditi

இந்தநிலையில் அபி சரவணன் – அதிதி மேனன் விவாகரத்து வழக்கு இன்று மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் வந்தது. அப்போது குடும்ப நல கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியாது. வழக்கை  நீதிமன்றத்தில் எதிர்கொள்கிறேன்  என்று அதிதி மேனன் கூற,  நீதிபதியோ இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கண்டிப்பாக கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று நீதிபதி கூறியதையடுத்து அவர் இன்று கவுன்சிலிங்கில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.