விழுப்புரம்: சிறுமியைக் கொன்றவர்களுக்கு பாகுபாடின்றி தண்டனை! – சீமான் வலியுறுத்தல்

 

விழுப்புரம்: சிறுமியைக் கொன்றவர்களுக்கு பாகுபாடின்றி தண்டனை! – சீமான் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் முன் தகராறு காரணமாக சிறுமி ஒருவர் எரித்துக்கொள்ளப்பட்ட விவகாரத்தில் எவ்வித பாகுபாடுமின்றி விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

villupuram-girl-murder

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மே 11) வெளியிட்டுள்ள ட்வீடில், “விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தங்கை ஜெயஸ்ரீ, குடும்ப முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கேற்கிறேன்.

பெரியவர்களுக்குள் இருக்கும் குடும்பப் பகைக்கு குழந்தையை எரித்துக் கொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாத கொடூரமான செயல். இதற்கு காரணமானவர்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையான சட்டங்களால் மட்டுமே நிறுத்தப்படும் என்பதை உணர்ந்து அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!” என்று கூறியுள்ளார்.