விழுப்புரம் அருகே திருநங்கை அபிராமி கொடூர கொலை: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

விழுப்புரம் அருகே திருநங்கை அபிராமி கொடூர கொலை: அதிர்ச்சி தரும் சம்பவம்!

விழுப்புரம் அருகே  திருங்கை ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் : விழுப்புரம் அருகே  திருங்கை ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

trans

விழுப்புரம்  ஐயங்கோவில்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவர்  அபிராமி. திருநங்கையான அபிராமி இன்று அதிகாலை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பிணமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் அபிராமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

murder

இதுகுறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், அமிராமியின் உடன் இருந்த திருநங்கைகள் காரில் வந்த மர்மநபர்கள் சிலர் அபிராமியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தாக கூறியுள்ளனர். அவர்களின் தகவலின் அடிப்படையில் போலீசார் கொலை குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.