விழுந்தது அடுத்த பேனர்! சாலையில் சென்றுகொண்டிருந்த டாஸ்மாக் ஊழியர் மீது விழுந்து விபத்து!!

 

விழுந்தது அடுத்த பேனர்! சாலையில் சென்றுகொண்டிருந்த டாஸ்மாக் ஊழியர் மீது விழுந்து விபத்து!!

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருக்கும் சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேலும் ஒரு பேனர் விழுந்து டாஸ்மாக் ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருக்கும் சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேலும் ஒரு பேனர் விழுந்து டாஸ்மாக் ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பள்ளிகரணை அருகே சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் மேலே விழுந்ததால், இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த குரோம்பேட்டை, நெமிலிச்சேரியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் கீழே விழுந்து லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

banner

இந்நிலையில் இன்று வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேலும் ஒரு பேனர் விழுந்தது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டாஸ்மாக் ஊழியர் மீது அங்கு திருமணத்துக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த அந்த ஊழியர், அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு வாலஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்