விளையாடிய சிறுமியை களவாடிய ட்ரைவர் -பந்து விளையாடிய சிறுமி பலாத்காரத்தால் பந்தாடப்பட்டார்

 

விளையாடிய சிறுமியை களவாடிய ட்ரைவர் -பந்து விளையாடிய சிறுமி பலாத்காரத்தால் பந்தாடப்பட்டார்

பாரபங்கி: உத்தரபிரதேசத்தின் பராபங்கி மாவட்டத்தில் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 26 வயது நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

பாரபங்கி: உத்தரபிரதேசத்தின் பராபங்கி மாவட்டத்தில் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 26 வயது நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் குடும்ப உறவினரின் ‘டிரைவர்’ ஆக  இருந்தார். ஆபத்தான நிலையில் அவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“சனிக்கிழமை மாலை, மைனர் சிறுமியின் உறவினர் ஒருவர் தனது குடும்பத்தோடு அங்கு வந்திருந்தார். சிறுமி தனது வீட்டின் பின்னால் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களின் ட்ரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்” என்று போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் சதுர்வேதி கூறினார்.
“சிறுமி அழுது சத்தம்போட்ட போது  ஓடிவந்த அவள் உறவுகள் அவள் இரத்தப்போக்கு கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர் ,” என்று அவர் கூறினார்.

“குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க முயன்றார், ஆனால் கிராமவாசிகளால் பிடித்து போலீசில் ஒப்படைக்கப்பட்டார் ,” என்று அவர் மேலும் கூறினார். அவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது இந்திய சட்டத்தின்  கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அந்த சிறுமி ஆபத்தான நிலையில் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், என்று சதுர்வேதி கூறினார்.